அவர் ஒரு பெண் இயக்குகிறார் என்ற எந்த சிம்பதியும் இல்லாமல், முறையாக கதையையும், முழு விவரங்களையும் கேட்டுவிட்டு எடிட் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
அந்த நிமிடம் நம் வேலையை ஒருவர் முழுவதுமாக அங்கீகரிக்கிறார் என்றப் புதுத் தெம்பு வந்தது.
அப்போதிலிருந்து என் நலம்விரும்பியாக ஒவ்வொரு சூழலிலும் எனக்கு முறையாக ஆதரவளித்து பாராட்டி வருகிறார்.

இதுதவிர, ஶ்ரீகர் பிரசாத் சார் எடிட் செய்கிறார் என்கிறபோது, அது எங்கள் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
`இது நல்லப்படமாகதான் இருக்கும். அப்படி இல்லை என்றால் ஶ்ரீகர் பிரசாத் ஒத்துக்கொள்ளமாட்டார். படத்தில் என்னமோ இருக்கிறது’ என்ற நல்லெண்ணம் எல்லோருக்கும் உருவானது.
இந்தப் படத்தின் எடிட்டிங் முடிந்ததும் ஶ்ரீகர் சார், இயக்குநர் ராம் சாரிடம், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ராம் சாரும் படத்தை பார்த்துவிட்டு, “இந்தப் படத்தின் கதைக் கரு சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டிய படம்” எனப் பாராட்டி கூடுதல் நம்பிக்கையளித்தார். இப்படித்தான் இந்தப் படத்துக்கான வரவேற்பு மகிழ்வை தருகிறது.”

