தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விஜித் கதாநாயகனாகவும், கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், வடிவுக்கரசி, நீலிமா ஆகியோர் நடித்திருக்கின்றனர். வரும் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல் 24) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் கலந்துகொண்டார். தேவயானி குறித்து பேசிய நகுல், ” அக்கா தேவயானிக்கு நான் தம்பியாக பிறந்ததைப் பாக்கியமாக நினைக்கிறேன். சிறிய வயதில் இருந்து அக்காவின் கடின உழைப்பைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எப்போதுமே அவரிடம் ஆட்டிட்யூட்(Attitude) இருக்காது.