வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’.
இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என்று பலர் நடித்திருக்கின்றனர்.
காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 19 இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப்.9) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, “சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர் கௌதமன்.
அதுமட்டுமின்றி அவர் சமரசம் இல்லாத ஒரு போராளி. ஒரு படத்திற்கான வெற்றியானது விழாக்களாலும், பத்திரிகையாளர் சந்திப்புகளாலும் தீர்மானிக்கப்படுவதில்லை.
இன்று திரைப்பட உலகத்தினுடைய நோக்கும், போக்கும் துன்பத்தில் இருப்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
‘படையாண்ட மாவீரா’ படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. அதற்கு முன்னாள் நிகழ்காலப் படங்கள் பலவற்றின் பலவீனங்களைச் சொல்லப்போகிறேன்.