இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “பறந்து போ’. இத்திரைப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று(ஜூலை 3) செய்தியாளர்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. அதன் பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

முதலில் பேசிய மிர்ச்சி சிவா, “ எதிர்பார்த்ததைவிட எல்லோரும் நன்றாக சிரிச்சுப் பார்த்தீங்க. ‘சென்னை 28’ படத்துல இருந்தே உங்களுடன் ஒரு கனெக்ட் இருக்கு. இன்னைக்கு இந்தப் படத்தைப் பார்த்த எல்லோரும் என்கிட்ட சொன்னது என்னென்னா? நான் முதல் படம் நடிச்ச மாதிரி உணர்ந்தேன்’னு சொன்னாங்க” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.