இதுக்கு மூலக் காரணமே டாக்டர் சுப்பாராவ்தான், அவர்கள் என்னைக் காப்பாத்தினாங்க. அவரை கடவுளாக நினைக்கிறேன். இதுவரைக்கும் ஐ.சி.யூ-ல இருந்தேன்.
எமர்ஜென்சியில் தான் அட்மிட் ஆனேன், இப்போ நார்மல் வார்டுக்கு வந்திருக்கேன். குணமாக இன்னும் இரண்டரை மாதம் ஆகும்னு சொல்லியிருக்காங்க.
ஆபரேஷன் பண்ணியிருக்காங்க, ஆசனவாய் அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கு. தற்போதைக்கு வேலைக்கு எதுவும் போக முடியாது.

சிரஞ்சீவி சார், சரத்குமார் சார் எனக்கு உதவிகள் பண்ணினாங்க. அதே மாதிரி தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், நிழல்கள் ரவி, ரவி மோகன், சிம்பு, கமல் சார்-னு பலரும் எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்து உதவி பண்ணினாங்க.
நண்பர்களும், நடிகர்களும் நிறைய உதவிகள் பண்ணி, எனக்கு இந்த உயிர் பிச்சையைக் கொடுத்ததுக்கு நன்றியைச் சொல்லிக்கிறேன்.