இந்த டிஜிட்டல் காலத்தில் வெள்ளந்தியாக நேர்மையாக இருக்கும் ஒருவர் என்னவெல்லாம் பிரச்னைகளைச் சந்திக்கிறார். குடும்பமும், சமுதாயமும் அவரை எப்படி நடத்துகிறது என்பதே இதன் கதைக்களம். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தைப் பார்த்திருக்கும் நடிகர் ரஜினி, படக்குழுவைப் பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ரஜினி, “ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று, நான்கு நாள்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைப்பிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும்.