அந்தப் பேட்டியில் அவர் பேசும்போது, “அப்பாவும், ரஜினி சாரும்தான் தமிழ் சினிமாவின் இரண்டு ஐகானிக் தூண்கள்.
மற்றவர்களைப் போலவே, எனக்கும் ரஜினி சாரைப் பற்றி மக்கள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் மட்டுமே தெரியும். மக்கள் நான் அவருடன் வளர்ந்திருப்பேன் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் அது உண்மையல்ல. அவர் மற்ற அனைவருக்கும் எப்படி ஒரு சூப்பர் ஸ்டாரோ, எனக்கும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான்.
இதுவரை நான் ரஜினி சாரை என் அப்பா சொன்ன விஷயங்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்தேன். அவர் மிகவும் தனித்துவமானவர், கூர்மையானவர், புத்திசாலி.
ஆனால் அதே நேரத்தில் அன்பானவர் மற்றும் பேசுவதற்கு எளிமையானவர். ‘நீங்கள் உண்மையிலேயே மிகவும் கூல்’ என நான் அவரிடம் சொன்னேன்.
ஏனெனில் அவர் அப்படித்தான் இருப்பார். அவர் தனது உயர்ந்த அந்தஸ்தின் பாரத்தை சுமப்பதில்லை. அவர் படப்பிடிப்புத் தளத்திற்கு பாசிட்டிவான எனர்ஜியைக் கொண்டு வருவார். அனைவரும் அவருடன் இருப்பதில் மகிழ்ச்சியாக இருந்தோம்.” என்றார்.