ஆனால் அதனை ஆமீர் கான் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என்று ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆமீர் கான் அளித்துள்ள பேட்டியில், “‘தியேட்டரில் வெளியான பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. அப்படத்தை வெளியிடப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நான் அனைத்தையும் நிராகரித்துவிட்டேன். ஏனென்றால் நான் சினிமாவை நம்பக்கூடியவன். சினிமாவால்தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். மக்கள் எனது படத்தை தியேட்டரில் பார்ப்பதால்தான் நான் இப்போது உங்கள் முன்னால் இருக்கிறேன்.

நான் முட்டாளாக இருக்கலாம். ஒ.டி.டி தளத்திற்கு விற்பனை செய்யாமல் நான் தவறு செய்திருக்கலாம். மிகப்பெரிய பண இழப்பு கூட ஏற்படலாம். என்ன நடக்கிறது என்பதைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு படத்தையும் பார்க்க தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. எனவே அதனை அதிகரிப்பதுதான் எனது வேலை. நான் எனது ரசிகர்களையும், தியேட்டர்களையும் நம்புகிறேன்.
ஒ.டி.டி தளத்தில் விற்பனை செய்யாமல் எந்த தயாரிப்பாளரும் படத்தைத் தயாரிக்கத் தொடங்குவதில்லை. நான் மட்டும்தான் ஒ.டி.டி தளத்திற்கு விற்பனை செய்யாமல் படம் தயாரிக்கிறேன். எனக்கு அதில் விருப்பம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நடிகை ஜெனிலியா தேஷ்முக், கோபி கிருஷ்ணா வர்மா உட்படப் பலரும் நடித்துள்ளனர்.