இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா, 10 வருடங்களுக்குப் பிறகு தான் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “தனது ட்ரீம் பிராஜெக்ட் `கில்லர்’ மூலம் உங்களின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் திரும்பியிருக்கிறார்.
இதில் கோகுலம் சினிமாஸ் கோகுலம் கோபாலன் சாருடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி.
உங்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் வேண்டும்” என்று பதிவிட்டு தயாரிப்பாளருடான புகைப்படத்தையும் ஷேர் செய்திருக்கிறார்.
மேலும், கில்லர்’ஸ் கேர்ள் என்று குறிப்பிட்டு அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி tag செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்வாறிருக்க எஸ்.ஜே.சூர்யாவின் இந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்திருக்கும் நடிகர் சிலம்பரசன், “இயக்குநராக மீண்டும் வந்ததற்கு வாழ்த்துகள் எஸ்.ஜே.சூர்யா சார்.
நாங்கள் எப்போதும் மதிக்கும் ஒரு ஸ்டோரிடெல்லர்”என்று வாழ்த்தியிருக்கிறார்.