சூரி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான “மாமன்’ திரைப்படம் நேற்று (மே 16) வெளியானது.
காமெடி கலந்த எமோஷனல் திரைப்படமான `மாமன்’, திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இவ்வாறிருக்க, சூரியின் ரசிகர்கள் சிலர் மாமன் திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென மண் சோறு சாப்பிட்டிருக்கிறார்கள்.
இதையறிந்த சூரி, “ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டது முட்டாள்தனமானது. ஒரு படத்தோட கதை நன்றாக இருந்தால் அது ஓடப் போகுது.
மண் சோறு சாப்பிட்டால் படம் ஓடப்போகுதா என்ன? இந்த காசுக்குச் சிலருக்கு தண்ணீர் வாங்கிக் கொடுத்திருக்கலாம்,
சாப்பாடு கொடுத்திருக்கலாம். இப்படியான விஷயங்கள் பண்றவங்க என்னுடைய ரசிகர்களாக இருப்பதற்குத் தகுதி இல்லாதவங்க” என்று கண்டித்தார்.