sridevi: ``ராஜமௌலியிடன் ஶ்ரீதேவி குறித்து தவறாக சொல்லப்பட்டது" - போனி கபூர் சொல்வது என்ன?

sridevi: “ராஜமௌலியிடன் ஶ்ரீதேவி குறித்து தவறாக சொல்லப்பட்டது” – போனி கபூர் சொல்வது என்ன?


இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) தயாரிப்பில், பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணாடகுபதி, சத்யராஜ், நாசர் ஆகியோர் நடித்த பாகுபலியின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றிபெற்றன.

இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான சிவகாமி தேவி வேடத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

ஆனால், சம்பளம் மற்றும் பிற தேவைகள் குறித்து தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ராஜமௌலி மற்றும் ஸ்ரீதேவிக்கு இடையே ஒரு பிணக்கு ஏற்பட்டது.

ஸ்ரீதேவி - போனி கபூர்

ஸ்ரீதேவி – போனி கபூர்

இதன் காரணமாகவே ஸ்ரீதேவி “பாகுபலி’ படத்தில் நடிக்கவில்லை. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து ஶ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் மனம் திறந்துப் பேசியுள்ளார்.

சமீபத்தில் கேம் ஜேஞ்சர் எனும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், “பாகுபலி படத்தில் ஸ்ரீதேவி நடிக்காததற்கு தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட குழப்பம்தான் காரணம்.

ராஜமௌலி எங்கள் வீட்டிற்கு வந்து கதை பற்றிப் பேசினார். ஶ்ரீதேவிக்கும் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தது. அவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *