லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில், ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் “மார்கன்’.
இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று (ஜூன் 24) மதுரையில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது அவரிடம் நடிகர் ஶ்ரீகாந்த்தின் போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்று இல்லை. நீண்ட காலமாகவே இருக்கிறது.
புகை பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பழக்கம். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். உண்மை என்னவென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியிருக்கிறார்.