STR: ``கமல் சார் நடித்துக் காட்டிய 7 பேர் காட்சி; மிரண்டு விட்டேன்"- பிரமித்த சிலம்பரசன்

STR: “கமல் சார் நடித்துக் காட்டிய 7 பேர் காட்சி; மிரண்டு விட்டேன்”- பிரமித்த சிலம்பரசன்


கமல் குறித்து பேசிய சிம்பு, ” இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஈசியாகத்தான் இருந்தது. கமல் சார், மணி சார் இருக்கிறார்கள் எப்படி நடிக்கப்போகிறோம் என்று முதல் இரண்டு நாள்கள் மட்டுமே எனக்கு டென்ஷனாக இருந்தது.

ஆனால் கமல் சார் நல்ல கம்ஃபோர்ட் கொடுத்தார். அதன் பிறகு நம்மால் முடியும் என்ற மைன் செட்டிற்கு வந்துவிட்டேன். எனக்கு நடிப்பதில் எந்த சந்தேகம் இருந்தாலும் கமல் சாரிடம் கேட்பேன்.

நேர்காணலில்...

நேர்காணலில்…

ஒரு காட்சியில் ஆறு, ஏழு பேர் நடித்துக்கொண்டிருந்தோம். எல்லோரும் அவர்களுடைய டயலாக்கை சரியாகச் சொல்லவேண்டும். அந்த இடத்திற்கு கமல் சார் வந்தார்.

எல்லாருடைய டயலாக்கையும் சரியாகச் சொல்லி நடித்துக் காண்பித்தார். “அந்நியன்’ படத்தில் வருகிற மாதிரி இரண்டு கதாபாத்திரங்களை மாறி மாறி நடிக்கலாம்.

ஆனால் கமல் சார் ஆறு, ஏழு கதாபாத்திரத்தை ஒரே நேரத்தில் நடித்துக் காண்பித்தார். அதைப் பார்த்து மிரண்டு விட்டேன். அவர் பக்கத்தில் இருந்தாலே நன்றாக இருக்கும். கமல் சாருடன் பணியாற்றியது மிகவும் உதவியாக இருந்தது” என்று கமல் குறித்து சிம்பு நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *