இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவான “தலைவன் தலைவி’ படம் நேற்று (ஜுலை 25) திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகி இருக்கிறது. எனக்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது. ஆடியன்ஸும் படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.