“நாசர் சார் தினமும் எனக்குக் கம்பனி கொடுப்பாரு. பாண்டிச்சேரில ஷூட் முடிச்சிட்டு என்னுடைய கார்ல நாசர் சார், பக்ஸ் அண்ணாலாம் வந்தது என்னைக்கும் நினைவுல வச்சிருப்பேன். நாசர் சார் ரொம்பவே அறிவார்ந்தவர்.
அதுபோல, ஃபன்னானவரும்கூட!” என்று சொன்ன அவர், “இப்போ எனக்குக் கிடைச்சிருக்கிற எல்லா விஷயங்களுக்கும் காரணம் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம். அப்படத்தின் ஆதிக் கதாபாத்திரம்தான் என்னைப் பலருக்கும் கொண்டு போய் சேர்த்தது.

மணி சாரை நான் சந்திக்கிறதுக்கு காரணமும் ஒரு வகையில அந்தப் படம்தான். ‘நேர்கொண்ட பார்வை’ படத்துல நடிகை ஷர்தா ஶ்ரீநாதுக்கு பின்னணி பாடகி கிருத்திகா நெல்சன்தான் டப் பண்ணினாங்க.
அவங்க ‘பொன்னியின் செல்வன்’ படத்துல உதவி இயக்குநராகவும் பணியாற்றினாங்க. அவங்க மூலமாகதான் மணி சாரைச் சந்திச்சேன். என்னைக்கும் ஹெச்.வினோத் சாருக்கு நன்றி சொல்லுவேன்!” எனக் கூறி முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…