அவர், “சமீபத்தில், ஒரு இளம் பெண் எனது அலுவலகத்திற்கு வந்து, உதவி இயக்குநராகச் சேர வாய்ப்பு கேட்டார்.
அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர், ஆனால் சென்னையில் தனது நண்பர்களுடன் வசிப்பதாகக் கூறினார்.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, நானும் இதே போன்ற சூழலில் இருந்தேன். தற்போது, பல இளம் பெண்கள் தனித்துவமான யோசனைகளுடன் முன்னேறி வருவதைப் பார்க்கிறேன்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “நான் வன்முறையைக் காட்டிலும் காதல் படங்களை அதிகமாகத் தேர்ந்தெடுப்பேன்.
நான் காதல் கதைகளைப் படமாக உருவாக்கலாம் என முடிவெடுத்தாலும் உங்களுடைய எதிர்பார்ப்பு வேறொரு விதமாக இருக்கிறது” என்றவர், அவருக்குப் பிடித்த சமீபத்திய இளம் இயக்குநர்கள் தொடர்பாகப் பேசினார்.
அவர், “நிறையப் பேர் இருக்கிறார்கள். சிலர் இன்னும் நல்ல படங்களை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். அந்த லிஸ்டில் வினோத்ராஜ் மற்றும் வர்ஷா (‘பேட் கேர்ள்’ இயக்குநர்) இருக்கிறார்கள்.” என்றார்.