“என் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்க வேண்டிய நாள்!” என இன்ஸ்டாவில் நெகிழ்ந்துள்ளார் ராஜு.
இதுவரை சின்னத் திரை நிகழ்ச்சிகளிலும், வெள்ளித்திரையில் சிறிய கதாபாத்திரங்களிலும் தோன்றிய ராஜு, முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார்.
2்கே கிட்ஸின் காதல், நட்பில் உள்ள குழப்பங்கள் பற்றி கலகலப்பாக பேசும் படமாக இது இருக்கும் என விகடன் பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.
பன் பட்டர் ஜாம் படத்தில், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா என இரு நாயகிகள் இடம்பெற்றுள்ளனர். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஏதோ பேசதானே, தியா தியா பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருக்கின்றன.