கதையா இருக்கட்டும், விஜய் நடிப்பா இருக்கட்டும், வடிவேலு காமெடியா இருக்கட்டும், காதல் காட்சிகளா இருக்கட்டும், விஷுவலா இருக்கட்டும் இன்னைக்குப் பார்த்தாலும் அதே ஃப்ரெஷ்னெஸ்ஸோட இருக்கு. அதுதான், இந்த படத்தோட வெற்றியா பார்க்கிறேன்” என்றவர், விஜய் சார்க்கிட்ட ஷூட்டிங் ஸ்பாட்டுல மறக்கமுடியாத சம்பவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார். “க்ளைமாக்ஸ் ஷூட் கோயம்புத்தூர் விமனா நிலையத்துல எடுத்தோம். அப்போவே, நிறைய காலேஜ் பொண்ணுங்க போட்டோ எடுக்க குவிஞ்சுட்டாங்க. ரெண்டு நாள் ஷூட்டிங் முடிச்சுட்டு, விடியற்காலையில் ஃப்ளைட். ஆனாலும், ஒன்றரை மணிவரை பேசிக்கிட்டிருந்தோம்.
அப்புறம், தூங்க போயிட்டோம் திடீர்ன்னு ரெண்டு பொண்ணுங்க, விஜய் சாரை பார்க்க வந்திருக்காங்கன்னு மேனேஜர் வந்து சொன்னார். இந்த நேரத்துல பார்ப்பாரான்னு தெரியலைன்னு சொன்னேன். ஆனா, அந்த பொண்ணு ஹாஸ்பிடலில் உடம்பு சரியில்லாம இருந்த சூழலில் அண்ணனை பார்க்கணும்னு ரொம்ப பாசமா சொல்லிச்சு. அந்த சூழலிலும் வந்து பார்த்த விஜய், ரெண்டரை மணிவரைக்கும் பேசிக்கிட்டுப் போனார். அதை, பெரிய விஷயமா பார்க்குறேன். அது மறக்கவே முடியாது” என்று நினைவுகளில் மூழ்கியவரிடம் கடைசியாக “விஜய் அரசியலுக்கு வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?” என்றோம்,
“அவரோட சம்பளம் எவ்ளோங்குறது ஓபன் சீக்ரெட். எல்லாருக்குமே தெரிஞ்சதுதான். ஆனா, அதையெல்லாம் விட்டுட்டு உண்மையிலேயே மக்கள் சேவை செய்யத்தான் வர்றாரு. நிச்சயமா அரசியலிலும் சாதிப்பார்” என்கிறார் அழுத்தமாக.
சச்சின் படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சியை கமென்ட் பண்ணுங்க