இன்று அப்படத்தின் இயக்குநர் கோபி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது இந்தக் காட்சி குறித்து விளக்கமளித்தார். “நான் விஜய் ரசிகன், திரைத்துறையில் பயணிக்கும் போது அனைவருக்கும் ஏற்படுவது போலத்தான், அவரை வைத்து ஒரு படம் இயக்க மாட்டோமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், 69 வது படத்துடன் அவர் நடிப்பதை நிறுத்துவிடப் போகிறார், என்பது அதிர்ச்சியாக இருந்தது.

இனி அவருடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், அவரைப் பற்றிப் பேசுவதற்கான இடம் படத்தில் அமைந்ததாலேயே அப்படிப்பட்ட காட்சிகளை வைத்தோம். அது முழுக்க முழுக்க கற்பனையானதே தவிர மற்றபடி அதில் வேறு எந்த அரசியல் பிரசாரமும் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.