Vijayakanth: அம்மா அப்பா பேரை ஆசையா வச்சார் - 'ஆண்டாள் அழகர்' கல்லூரி குறித்து விஜயகாந்த் ரசிகர்கள்

Vijayakanth: `பத்திரமெல்லாம் வேணாம் பணத்தை வாங்கிட்டுப் போ’- மூப்பனார் பற்றி மனம் திறந்த விஜயகாந்த்


தேவைப்பட்ட பணம்; நண்பன் ராவுத்தரின் யோசனை

நான் விஜயகாந்த்தோடு சேர்ந்து நேர்காணல்களுக்காக தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேலாகப் பழகியிருந்த அனுபவத்தில், ஓரளவு அவரது உள்ளும் புறமும் அறிந்தவன். விகடனில் அப்போது “களத்தில் கேப்டன்’ என்ற கட்டுரை தொடருக்காக நான் அவரோடு போகிற வழியில் சற்று இளைப்பாறுவதற்காக அந்தக் கல்லூரிக்கு போயிருந்தோம். அப்போதுதான் எல்லோரும் ஆச்சர்யப்பட்ட அந்த இடத்தை வாங்கிய விவரம் பற்றி கேட்டேன். அவர் கூறியதை அப்படியே இங்கு தருகிறேன்.

அந்த இடத்தை வாங்கிய விவரம்

கேப்டன் விஜயகாந்த் சொன்னவை; “ராவுத்தர் தான் முதலில் இப்படி ஒரு இடம் விலைக்கு வந்திருப்பதை பற்றிச் சொன்னான். உன்னோட கனவு இதில் நிறைவேறும் என்றான். எனக்கு ஒரு பெரிய கல்லூரியைக் கட்டி சகாயமான கட்டணத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை அவன்கிட்ட சொல்லி புலம்பிக்கிட்டே இருப்பேன். ராவுத்தர் இந்த இடத்தை வாங்கி அந்தக் கல்லூரியைக் கட்டிடலாம் என்றான். எனக்கு அது சரியான விஷயமாகப்பட்டது. நானும் அந்த இடத்தைப் பார்த்துவிட்டேன். எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. ஆனால் உடனடியாக பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.

விஜயகாந்த்

விஜயகாந்த்
படம்; கே.ராஜசேகரன்

நண்பன் ராவுத்தர் ஒரு ஐடியா சொன்னான். ஆனால் அந்த ஐடியா ஒர்க்கவுட் ஆகுமா என எனக்கு சந்தேகம் இருந்தது. அந்த ஐடியா இதுதான், ‘நாம் இரண்டு பேரும் மூப்பனார் ஐயாகிட்ட போய் இந்தப் பணத்தை கேட்போம். பணத்தை திருப்பி தர கொஞ்ச காலம் அவகாசமும் கேட்போம். நிச்சயம் கொடுப்பார். நம்பிப் போவோம். நம்பினார் கெடுவதில்லை’ என்றான் ராவுத்தர். உடனே ‘தங்களைப் பார்க்க வேண்டும் ஐயா’ என்று மட்டும் சொன்னான். மூப்பனார் ஐயா எங்கள் இருவருக்கும் நெருக்கமான அரசியல் தலைவர். உடனே வரச் சொல்லி விட்டார். நாங்கள் இரண்டு பேரும் அவரிடம் போய் நின்றோம். நானும் ராவுத்தரும் தயங்கித் தயங்கி இடம்பற்றிய தகவல் சொல்லி, கல்லூரி கட்ட நினைக்கிற ஆசையைச் சொல்லி பணம் கேட்டோம்.

‘கொஞ்ச காலம் அவகாசத்தில் கொடுத்து விடுகிறோம். பத்திரம் எழுதித் தருகிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம். கண்டிப்பாக முறையாக திருப்பித் தந்து விடுவோம்’ என்று இருவரும் சொன்னோம். அவர் ஒன்றுமே சொல்லாமல் எங்களை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். ‘நாளை மறுநாள் சாயங்காலம் வாருங்கள்’ என்று நலம் விசாரித்து விட்டு அனுப்பி விட்டார். கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *