நிழற்குடை (தமிழ்)

சிவா ஆறுமுகம் இயக்கத்தில் தேவயானி, விஜித், கண்மனி, நீலிமா ராணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நிழற்குடை’. குடும்பத்தில் வேலையில் பிஸியாக இருக்கும் பெற்றோரால் குழந்தைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இந்த வாரம் மே 9-ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.
கலியுகம் (தமிழ்)
பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், இனியன், ‘ஆடுகளம்’ கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலியுகம்’. இன்னும் 60 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த உலகில் நீர், உணவு, மனிதம் ஏதுமில்லாமல் போனால் என்ன நடக்கும் என்பதுதான் இதன் கதைக்களம். 2064ம் ஆண்டில் நடக்கும் சயின்ஸ் பிக்ஸன் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.