தேவையான பொருள்கள் :

பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய்,
கடுகு,
காய்ந்த மிளகாய்,
உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை.

செய்முறை :

  • அரிசி, துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
  • மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்த பின் அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் அரிசி, ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.
  • 8 லிருந்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும்.
  • அடுப்பை அணைத்ததும், நெய் அல்லது தேங்காய் எண்ணை சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.
  • சுவையான சத்தான அரிசி உப்புமா ரெடி.
  • அரிசி உப்புமாவிற்குக் தொட்டு கொள்ள காரச்சட்னி அருமையான இருக்கும்.

Related Searches :