🚀 நீலகிரியில் மகா சிவராத்திரி வழிபாடு… இரவு முழுவதும் கண்விழித்து பக்தர்கள் வழிபாடு… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5767267 cropped 16022026 125241 inshot 20260216 125006939 2 Thedalweb நீலகிரியில் மகா சிவராத்திரி வழிபாடு... இரவு முழுவதும் கண்விழித்து பக்தர்கள் வழிபாடு... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 16, 2026 6:36 PM ISTஊட்டியை அடுத்துள்ள காந்தல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோத சுவாமி ஊர்வலத்துடன் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.+ சிவன் கோவில்இந்தியா முழுவதிலும் பல்வேறு சிறப்பு வாய்ந்த சிவபெருமான் ஆலயங்கள் உள்ளன

2
வருடத்திற்கு ஒருமுறை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா நேற்று இரவு பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மேலும் வருடம் முழுவதும் நம்மை காக்கும் சிவபெருமானை நேற்று ஒரு நாள் இரவு கண் விழித்து நாம் பார்த்துக் கொள்ளும் விதமாக சிவராத்திரி கொண்டாடுவது ஐதீகம்

3
அந்தவகையில் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு சிவன் ஆலயங்களில் சிவராத்திரி திருவிழா நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஊட்டியை அடுத்துள்ள
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 16, 2026 6:36 PM ISTஊட்டியை அடுத்துள்ள காந்தல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோத சுவாமி ஊர்வலத்துடன் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.+ சிவன் கோவில்இந்தியா முழுவதிலும் பல்வேறு சிறப்பு…


Last Updated:

ஊட்டியை அடுத்துள்ள காந்தல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோத சுவாமி ஊர்வலத்துடன் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

+

சிவன்

சிவன் கோவில்

இந்தியா முழுவதிலும் பல்வேறு சிறப்பு வாய்ந்த சிவபெருமான் ஆலயங்கள் உள்ளன. வருடத்திற்கு ஒருமுறை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா நேற்று இரவு பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் வருடம் முழுவதும் நம்மை காக்கும் சிவபெருமானை நேற்று ஒரு நாள் இரவு கண் விழித்து நாம் பார்த்துக் கொள்ளும் விதமாக சிவராத்திரி கொண்டாடுவது ஐதீகம். அந்தவகையில் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு சிவன் ஆலயங்களில் சிவராத்திரி திருவிழா நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஊட்டியை அடுத்துள்ள காந்தல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோத சுவாமி ஊர்வலத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் வேல்வியூ சிவலிங்க ஆலயத்தில் பாரம்பரிய பறை இசையுடன் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன.

மேலும் எடக்காடு, தீனட்டி, உபதலை, அஜூர் போன்ற கிராமங்களிலும் உள்ள சிவன் ஆலயங்களிலும் மற்றும் மற்ற கிராமங்களில் உள்ள சிவன் ஆலயங்களிலும் இரவு முழுவதும் பொதுமக்கள் கண் விழித்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். பல கோவில்களில் நேற்று முதல் இன்று மாலை வரையிலும் சிறப்பு கொண்டாட்டங்கள் திருவிழாவாக நடைபெறுவதும் வழக்கம்.

இரவு நேரங்களில் ஆறு கால பூஜைகள் மற்றும் பல்வேறு பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனை மற்றும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்