தமிழ் திரை நட்சத்திரம் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரைப்பட பணிகளில் இருந்து சற்று ஓய்வெடுத்திருக்கும் ரஜினிகாந்த், நெருங்கிய நண்பர்களுடன் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தோளில் துண்டுடன் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு சாலையோரத்தில் நின்று சாப்பிடும் புகைப்படம் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
ரிஷிகேஷில் சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் உள்ள நபர்களுடன் உரையாடுவதையும் மற்றொரு படத்தில் பார்க்க முடிகிறது.