``வீட்டுக்கு வந்து பேசுவார்கள்,ஆனால் அந்தப் படத்தில் நான் இருக்க மாட்டேன்" - நடிகர் ஆனந்த ராஜ் வேதனை | ``They will come home and talk, but I will not be in that film'' - Actor Anand Raj's anguish

“வீட்டுக்கு வந்து பேசுவார்கள்,ஆனால் அந்தப் படத்தில் நான் இருக்க மாட்டேன்” – நடிகர் ஆனந்த ராஜ் வேதனை | “They will come home and talk, but I will not be in that film” – Actor Anand Raj’s anguish


அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்பெனி”.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் நடிகர் ஆனந்தராஜ்.

அப்போது அவர் கூறியதாவது:
“இந்தப் படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இங்கு இந்தப் படத்தை வாழ்த்த வந்திருக்கும் ஆர்.கே. செல்வமணியும், ஆர்.பி. உதயகுமாரும் என் நண்பர்கள்.

`மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' படத்தின் இசை வெளியீட்டு விழா

`மெட்ராஸ் மாஃபியா கம்பெனி” படத்தின் இசை வெளியீட்டு விழா

இவர்களின் முதல் படத்தில் நான் நடித்திருக்கிறேன். படத்துக்காக எவ்வளவு மெனக்கெட முடியுமோ, அந்த அளவு இருவரும் உழைப்பார்கள். அவர்களுக்கு நிகராக உழைத்ததால்தான் நான் இன்னும் இந்த திரைத்துறையில் இருக்கிறேன்.

நான் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ அதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவேன். என்னால் பயமுறுத்தவும் முடியும், சிரிக்க வைக்கவும் முடியும். ஆனால், இந்த திறமையை என்னிடம் வளர்த்தவர்கள் இந்த இயக்குநர்கள்தான்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *