இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விலை குறைவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட் ஃபார்ம் ஒன்றைத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “எனது கனவுத் திட்டம் ஒன்றை இன்று (அக்.1) தொடங்கி இருக்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களுக்காக ஒரு மிகத் தெளிவான, விலை குறைவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட் ஃபார்மை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பிளாட்ஃபார்ம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, சேவைகள் வழங்கப்படும்.
இதில் பிரபலமான கலைஞர்களும், வருங்கால சூப்பர் ஸ்டார்களும் பங்குபெறப்போகிறார்கள்.