💡 சிவமணி இசையில் பக்தி பரவசம்… 4 கால பூஜையுடன் களைகட்டிய பெருவுடையார் கோவிலில் சிவராத்திரி | தஞ்சாவூர் செய்தி(Thanjavur News)

✍️ |
Maha Shivratri 1 2026 02 113ebaa92b8ea7d006e8b4f8a88d7a3e Thedalweb சிவமணி இசையில் பக்தி பரவசம்… 4 கால பூஜையுடன் களைகட்டிய பெருவுடையார் கோவிலில் சிவராத்திரி | தஞ்சாவூர் செய்தி(Thanjavur News)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 17, 2026 10:57 AM ISTஉலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரி ஆன்மீக இசை நிகழ்ச்சி உடன் துவங்கியது

2
மாலை 6:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை புரிந்தனர்

3
+ பெருவுடையார் கோவிலில் சிவராத்திரிநாடு முழுவதும் உள்ள ஆன்மிகத் தலங்களில் மகா சிவராத்திரி விழா பிப்.15 ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலிலும் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் கண்விழித்து இருந்து, சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானின் நாமத்தை ஜபிப்பதன் மூலம் கர்ம வினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்

5
இதனை முன்னிட்டு,

📌 Last Updated:Feb 17, 2026 10:57 AM ISTஉலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரி ஆன்மீக இசை நிகழ்ச்சி உடன் துவங்கியது. மாலை 6:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு…


Last Updated:

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரி ஆன்மீக இசை நிகழ்ச்சி உடன் துவங்கியது. மாலை 6:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை புரிந்தனர். 

+

பெருவுடையார்

பெருவுடையார் கோவிலில் சிவராத்திரி

நாடு முழுவதும் உள்ள ஆன்மிகத் தலங்களில் மகா சிவராத்திரி விழா பிப்.15 ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலிலும் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் கண்விழித்து இருந்து, சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானின் நாமத்தை ஜபிப்பதன் மூலம் கர்ம வினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் மாலை 6 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

பக்தர்களுக்கு நெரிசல் ஏற்படாத வகையில், கோவில் நுழைவாயிலுக்கு செல்லும் நேரடி பாதையைத் தவிர்த்து மாற்றுப் பாதைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டிருந்தன.

பெருவுடையாருக்கு இரவு 10 மணிக்கு தொடங்கிய பூஜைகள், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நடைபெறும் வகையில் நான்கு கால பூஜையாக நடைபெற்றது. தொடர்ந்து, காலை 5 மணிக்கு அர்த்தஜாம பூஜையுடன் மகா சிவராத்திரி விழா நிறைவு பெற்றது.

பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் பக்தி பரவசத்தில் மூழ்கியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

AStrology 2026 02 c718f20b51b51299eee17054e81bb1c3 Thedalweb Astrology | 30 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் உருவாகும் ராஜயோகம்.. கோடிகளை அள்ளப்போகும் 4 ராசிகள் இவைதான்..!

🔥 Astrology | 30 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் உருவாகும் ராஜயோகம்.. கோடிகளை அள்ளப்போகும் 4 ராசிகள் இவைதான்..!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின் படி மீன ராசியில் நிகழும் கிரக மாற்றம் குறிப்பிட்ட…

numerology 2026 02 4daf70040b740745f2bc5a5949131623 Thedalweb Numerology | இந்த தேதிகளில் பிறந்தவர்களை எளிதில் நெருங்க முடியாதாம்.. கற்பனைக்கு அப்பாற்பட்டவர்களாம்.. எண் கணிதம் சொல்வது என்ன? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Numerology | இந்த தேதிகளில் பிறந்தவர்களை எளிதில் நெருங்க முடியாதாம்.. கற்பனைக்கு அப்பாற்பட்டவர்களாம்.. எண் கணிதம் சொல்வது என்ன? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1  எண் 1 (பிறந்த தேதியில் 1, 10, 19 அல்லது…