💡 Sabarimalai | சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரம்.. படையெடுக்கும் பக்தர்கள்! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 1 2025 11 b3d8f57a8eb552ae6a809636cc9409dd 3x2 Thedalweb Sabarimalai | சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரம்.. படையெடுக்கும் பக்தர்கள்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 05, 2026 7:32 AM ISTசபரிமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அறிவிப்பு.சபரிமலை ஐயப்பன் கோயில்சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று வரை 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.மண்டல பூஜை முடிந்து, கடந்த 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது

2
தொடர்ந்து, வரும் 14ஆம் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன

3
மகர விளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம், பந்தளம் வலிய கோயிக்கல் அரண்மனையில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து வரும் 12ஆம் தேதி ஊர்வலமாக
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 05, 2026 7:32 AM ISTசபரிமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அறிவிப்பு.சபரிமலை ஐயப்பன் கோயில்சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரமாக…


Last Updated:

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அறிவிப்பு.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலையில் மகர ஜோதி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று வரை 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

மண்டல பூஜை முடிந்து, கடந்த 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, வரும் 14ஆம் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. மகர விளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம், பந்தளம் வலிய கோயிக்கல் அரண்மனையில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து வரும் 12ஆம் தேதி ஊர்வலமாக கொண்டு வரப்படவுள்ளது.

இதற்காக அட்டதோடு முதல் நீலிமலை வரை உள்ள திருவாபரண பாதையின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. பெருவழிப் பாதையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்காணிப்பதற்காக வனத்துறை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுப் பாதைகளில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வனத்துறை சார்பில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மகர விளக்கு சீசனில் நேற்று மாலை 6 மணி வரை 4 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்