✅ Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பவனி.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2 2025 11 f4e39d3e8639066f39f21bc4fa437d3d 3x2 Thedalweb Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பவனி.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 25, 2025 8:46 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் டிஜிபி ரவாடா சந்திரசேகர் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் கற்பூர ஆழி பவனியில் பங்கேற்றனர், மண்டல பூஜை முன்னிட்டு விழா நடைபெற்றது.சபரிமலைசபரிமலை ஐயப்பன் கோயிலில் காவல் துறை சார்பில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் டிஜிபி தலைமையில் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது

2
நாளை மறுதினம் நடைபெறும் மண்டல பூஜைக்கு முன்னதாக, திருவிதாங்கூர் தேசவம் போர்டு ஊழியர்கள் மற்றும் காவல் துறை சார்பில் இரண்டு நாட்களுக்கு கற்பூர ஆழி பவனி நடைபெறும்

3
இதன்படி, தேவசம் போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழி பவனி நேற்று முன்தினம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Dec 25, 2025 8:46 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் டிஜிபி ரவாடா சந்திரசேகர் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் கற்பூர ஆழி பவனியில் பங்கேற்றனர், மண்டல பூஜை முன்னிட்டு விழா நடைபெற்றது.சபரிமலைசபரிமலை ஐயப்பன் கோயிலில்…


Last Updated:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிஜிபி ரவாடா சந்திரசேகர் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் கற்பூர ஆழி பவனியில் பங்கேற்றனர், மண்டல பூஜை முன்னிட்டு விழா நடைபெற்றது.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காவல் துறை சார்பில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் டிஜிபி தலைமையில் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுதினம் நடைபெறும் மண்டல பூஜைக்கு முன்னதாக, திருவிதாங்கூர் தேசவம் போர்டு ஊழியர்கள் மற்றும் காவல் துறை சார்பில் இரண்டு நாட்களுக்கு கற்பூர ஆழி பவனி நடைபெறும். இதன்படி, தேவசம் போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழி பவனி நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், காவல் துறையினர் சார்பில் நேற்று நடைபெற்றது.

இதில், மாநில டிஜிபி ரவாடா சந்திரசேகர் தலைமையில் கூடுதல் டிஜிபி-க்கள் ஸ்ரீஜித், வெங்கடேஷ், பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பங்கேற்றனர்.

கோயில் கொடிமரம் முன் இரண்டு பக்கமும் கம்பிகளால் இணைக்கப்பட்ட வட்ட வடிவ பாத்திரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி கற்பூரம் ஏற்றி பவனியை தொடங்கி வைத்தனர். இதனை இரண்டு காவலர்கள் முன்னும் பின்னுமாக அசைத்து செல்லும்போது கற்பூர தீபம் வானை நோக்கி எழுந்து சென்றது. சன்னிதானத்தில் தொடங்கிய இந்த பவனி, மாளிகைப்புறம் கோவிலுக்கு சென்று பின் கோயிலை வலம் வந்து 18 படிகள் முன்பு நிறைவுபெற்றது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5756066 cropped 10022026 160414 inshot 20260210 160359297 1 Thedalweb மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா... யானை மீது அம்மன் பவனி... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

⚡ மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா… யானை மீது அம்மன் பவனி… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Feb 10, 2026 5:45 PM ISTமார்த்தாண்டம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மாராயபுரம் மந்தாரம்…

HYP 5755190 cropped 10022026 100424 images 9 20260210t09572947 2 Thedalweb திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா... தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா… தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மார்ச் 4 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் மாசித்…

Train 5 2026 02 bd9f84215d921fca7954153f9aaa8f90 Thedalweb IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

📌 IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

📌 ஆன்மீக டூர் செல்ல வேண்டும் என காத்திருக்கும் பக்தர்களுக்கு வரபிரசாதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Source link…