கமல்ஹாசன் பிறந்தநாள்: அஜித், தனுஷ், கார்த்தி எனச் சக ஹீரோக்களுக்குப் பாடியவர் கமல்ஹாசன் | Kamal Haasan’s birthday: Kamal Haasan sang for fellow heroes like Ajith, Dhanush, Karthi

✍️ |
கமல்ஹாசன் பிறந்தநாள்: அஜித், தனுஷ், கார்த்தி எனச் சக ஹீரோக்களுக்குப் பாடியவர் கமல்ஹாசன் | Kamal Haasan's birthday: Kamal Haasan sang for fellow heroes like Ajith, Dhanush, Karthi


நாளை கமல்ஹாசனின் பிறந்த நாள். இந்திய சினிமாவில் கலை, தொழில்நுட்பம் தொடங்கி, துறை சாராத விஷயங்கள் வரை அத்தனையிலும் கற்றுத் தேர்ந்தவர் கமல்ஹாசன்தான் என்பார்கள்.

நடிப்பு தவிர, நடனம், தயாரிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர், பிக்பாஸ் என கமல் தொடாத துறைகளே இல்லை. அவர் நடிக்கும் படங்களில் அவர் பாடிய பாடல்கள் இப்போதும் ஆல் டைம் ஃபேவரிட் தான்.

“யார் யார் சிவம்..’, ‘கண்மணி அன்போடு காதலன்..’, ‘அம்மம்மா வந்தது இங்கு செல்லக்குட்டி’, ‘ராஜா கைய வச்சா…’, ‘சுந்தரி நீயும்..’, ‘தென்பாண்டி சீமையிலே..’, ‘விக்ரம்.. விக்ரம்..’, ‘பத்தல பத்தல..’, ‘நினைவோ ஒரு பறவை..’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘உன்ன விட..’ என கமல் பாடிய பாடல்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் இனிக்கும் இன்பம் தான்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இதில் ஆச்சரியமான ஒரு விஷயம். மற்ற ஹீரோக்களுக்காகவும் அவர்களது படங்களில் பாடியிருக்கிறார் கமல். சக ஹீரோக்களின் படங்களில் ‘இந்தப் பாடல் கமல் பாடினால்தான் சிறப்பாக வரும்’ என இசையமைப்பாளர்களோ அல்லது இயக்குநர்களோ விரும்பினால் கமலிடம் கேட்டுவிட்டால் போதும்.

மறுக்காமல் பாடிக்கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ வரை உதாரணங்களை அடுக்கலாம். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக, ஒரு மினி பார்வை இது..

கமல், ரஜினி

கமல், ரஜினி

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975ல் தான் கமல் முதன் முதலில் ஒரு பாடலைப் பாடினார். ஜி.தேவராஜன் இசையில் ‘ஞாயிறு ஒளிமழையில்..’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் தெவிட்டாத தேன் பாடலாக ஒலிக்கவே, கமல் தனது படங்களில் பாடுவதைத் தொடர்ந்தார். அப்போது மலையாளத்திலும் நடித்து வந்ததால், அங்கேயும் பாடல்கள் பாடினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

“பணம் பறிப்பதும், எங்களைப் பிரிப்பதுமே ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம்” - ஸ்ருதி ரங்கராஜ் | Shruthi Rangaraj slams Joy Griselda over Madhampatty Rangaraj issue

“பணம் பறிப்பதும், எங்களைப் பிரிப்பதுமே ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம்” – ஸ்ருதி ரங்கராஜ் | Shruthi Rangaraj slams Joy Griselda over Madhampatty Rangaraj issue

சென்னை: “மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம். நான் என் கணவர் ரங்கராஜ் உடன்…

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸில்டா மனு! | Joy Grisilda petitions for CBCID probe into Madhampatti Rangaraj case

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸில்டா மனு! | Joy Grisilda petitions for CBCID probe into Madhampatti Rangaraj case

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்துள்ள புதிய…

ரோபோ சங்கர்: ``அவர் இருந்திருந்தால் கொண்டாட்டமே வேற மாதிரி இருந்திருக்கும்" - நாயகன் ரீரிலீஸ் இந்திரஜா | Robo Shankar: ``If he had been here, celebration have been different'' - Indraja on Nayagan rerelease

ரோபோ சங்கர்: “அவர் இருந்திருந்தால் கொண்டாட்டமே வேற மாதிரி இருந்திருக்கும்” – நாயகன் ரீரிலீஸ் இந்திரஜா | Robo Shankar: “If he had been here, celebration have been different” – Indraja on Nayagan rerelease

படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திரஜா ரோபோ ஷங்கர், “நாயகன் படத்தை நான் இன்னைக்குதான் முதல் முறையாக…